உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்

கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு திருப்பவித்ர உற்ஸவம் செப்.3 முதல் 7 வரை நடக்கிறது. செப்.3 காலை 10:00 மணிக்கு சுந்தரபாண்டியன் குறடு மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவித்து 108 கலச திருமஞ்சனம் நடைபெறும். செப். 7 ல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும். மறுநாள் (செப். 8) காலை 6:00 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை