மேலும் செய்திகள்
பிரதமர் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு
10-Oct-2025
மதுரை : இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்று(அக்.15) கடைசி நாள். விண்ணப்பத்தை அக்.31க்குள் கல்வி நிறுவனங்கள் சரி பார்க்க வேண்டும். கடந்தாண்டு பயனடைந்த மாணவர்கள் இணையதளத்தில் (https://scholarships.gov.in) renewal application என்ற இணைப்பில் ஒருமுறை பதிவு செய்த எண் மூலம் புதுப்பிக்க வேண்டும். புதிதாக பதிவு செய்தால் அலைபேசி, ஆதார் எண்களை உள்ளீடு செய்து ஒருமுறை பதிவு எண் (OTR), பாஸ்வேர்ட் பதிவு செய்ததும் அலைபேசிக்கு தகவல் வரும். பட்டியலிட்டுள்ள பள்ளி விவரங்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் அல்லது bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம். இத்திட்டம் குறித்து கூடுதல் விவரம் பெற http://Scholarships.gov.inல் அறியலாம்.
10-Oct-2025