| ADDED : ஜன 28, 2024 06:57 AM
எழுமலை : எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியின் 29 வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பொன் கருணாநிதி வரவேற்றார். நிர்வாகிகள் பொன் திருமலைராஜன், வரதராஜன், உதயசந்திரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆறுமுகசுந்தரி ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசுகையில், ''மாணவர்களை தொழில் முனைவோராக மாற்ற ஆசிரியர்கள் முயற்சி எடுங்கள். மாணவர்கள் யோகா, தியானம் செய்யுங்கள். இதன்மூலம் புத்தி, உடல் ஆரோக்கியம் சரியாக இருக்கும். எதைச் செய்தாலும் உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். படிப்படியாக உயர்வதே முழுமையானதாக இருக்கும். மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்'' என்றார்.