உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி காரணமாக தெற்கு தெரு தனியார் இடத்தில் 15 நாட்களாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாவதாக மே 17ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.நேற்று தற்காலிக பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் ஆதரவாளர்களுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பெண் ஆதரவாளர்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் சகதியில் நாற்று நட்டனர். உதயகுமாரை நகராட்சி கமிஷனர் அசோக்குமார், போலீசார் சமரசம் செய்தனர்.அவர் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்து 2019ல் அன்றயை முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். அரசாணையும் வெளியிடப்பட்டது. ரூ. 22.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போடப்பட்டது. பலமுறை சட்டசபையில் கேள்வி எழுப்பியும் பதில் தர மறுக்கிறார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VSMani
மே 20, 2025 15:46

புது பஸ் ஸ்டாண்ட் வரும் இடத்தை சுற்றிலும் உள்ள இடம்களை குறைந்த விலையில் வளைத்துப்போட்டிருப்பார். திமுக அரசு வந்ததும் அதை கிடப்பில் போட்டுட்டு வேறு இடம் தேர்வு செய்யலாம். அதனால் தர்ணா பண்ணலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை