தடையின்றி வெளிச்சம்
கொட்டாம்பட்டி,: மதுரை - - சென்னை நான்கு வழிச்சாலை கொட்டாம்பட்டியில், வலைச்சேரிபட்டி சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கு அமைத்துள்ளனர். 24 மணி நேரமும் எரிவதால் மின்சாரம் வீணாவதோடு தொடர்ந்து எரிவதால் அதிக வெப்பத்தில் மின்விளக்குகள் வெடிக்கின்றன. சேதமான விளக்குகளை மாற்றுவதற்கு நீண்ட நாட்கள் ஆவதால் வெளிச்சம் இல்லாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மின்சாரத்தை சேமிக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே வீணாக்குவது வேதனையை அளிக்கிறது.