உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

மயிலாடுதுறை: இலங்கை கடற்படையால் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், படகுகள், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் 4 பைபர் படங்களில் கடந்த 20ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 21ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய நிலையில் அவர்கள் கரை திரும்பவில்லை. இலங்கை கடற்படையினர் படகுகளை பறிமுதல் செய்து அதிலிருந்த 37 பேரை கைது செய்து காங்கேயம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையின் போது தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு பைபர் படகுகளில் இருந்த 6 மீனவர்கள் தப்பி இன்று பூம்புகார் வந்து தகவல் தெரிவித்தனர். இன்று காலை பூம்புகார் மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களை விடுவிக்கும் வரை காலவரற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதனால் பூம்புகார் துறைமுகத்தில் 100 விசைப்படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலுக்குச் செல்லாததால் மீனவர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி