உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நாகை மீனவர்கள் மீது தாக்குதல்; கடற்கொள்ளையர் அட்டூழியம்

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்; கடற்கொள்ளையர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், செருதுாரைச் சேர்ந்த தங்கதுரை, 55, உள்ளிட்ட மூவர், 26ம் தேதி பைபர் படகில், கோடியக்கரைக்கு தென் கிழக்கில், 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, மூன்று பைபர் படகில் வந்த ஒன்பது கடற்கொள்ளையர்கள், நாகை மீனவர்களை சுற்றி வளைத்து கொடூர ஆயுதங்களால் தாக்கி, படகில் இருந்த 'யமஹா' இன்ஜின், மொபைல் போன், வாக்கி டாக்கி, மற்றும் மீன்பிடி உபகரணங்களை தங்கள் படகில் ஏற்றி சென்றனர். இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.காயமடைந்த மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர். மூவரும் நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் படகு ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கியது. அதில் இருந்த இரு மீனவர்கள் நீந்தி, கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இருவர் கடலில் மூழ்கி மாயமாயினர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வர மீனவர்கள், கடந்த 26ல், 430 விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீன் பிடிக்க விடாமல் விரட்டினர். மரியசியா என்பவரது படகில் இருந்த மீனவர்கள், வலையை இழுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், அப்படகை பிடித்தனர். அதில் இருந்த எட்டு மீனவரை கைது செய்து, படகுடன் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செப்., 5 வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை சிறையில் அடைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை