கொத்தடிமை தொழிலாளர் முறைஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.முன்னதாக, நாட்டுப்புற கலைக்குழுவினரின் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன், தொழிலாளர் உதவி கமிஷனர் முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.