மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
05-Feb-2025
வட பத்ரகாளியம்மன் கோவிலில்வராகி அம்மனுக்கு பஞ்சமி பூஜைநாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் வட பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாதாள வராகி அம்மன், பிரத்தியங்கரா தேவி அம்மன், காளீஸ்வரமூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி முதல் வாரத்தில் பாதாள வராகி அம்மனுக்கு சிறப்பு பஞ்சமி அலங்கார பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விவசாயம் செழிக்க பலா, கருங்காலி, அரசு, அத்தி, சந்தனக்கட்டை, எள், உளுந்து, நெற்பொரி, பயறு, நெல், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி, தர்ப்பை, வெள்ளெருக்கு, தேங்காய், மா, நெய், எருக்கு, அறுகு, முருக்கு உள்ளிட்ட சக்தி வாய்ந்த மூலிகைகளை கொண்டு யாகம் நடத்தப்பட்டது. வட பத்ரகாளியம்மனுக்கு பால், நெய், சந்தனம், திருமஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் நாமக்கல், ராசிபுரம், ஆத்துார், சேலம், பெரம்பலுார், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
05-Feb-2025