மேலும் செய்திகள்
அருமந்தையில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
16-Jan-2025
மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.60,000, ஒரு பவுன் திருட்டுமோகனுார், :மோகனுார் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 42; நெய்க்காரன்பட்டியில் மளிகை கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலை, 6:00 மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த, 60,000 ரூபாய் ரொக்கம், ஒரு பவுன் தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16-Jan-2025