உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில், புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் இளம்வழுதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பலராமன், தொண்டரணி செயலாளர் வெங்கல் கோவிந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.அதில், தமிழகத்தில் தொடர்ந்து பட்டியலின மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை கண்டித்தும், சாதிய வன்மங்கள், வன்முறை வெறியாட்டங்களை கண்டித்தும், போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் ஹரிராம கிருஷ்ணன், வக்கீல்கள் அணி பூஜாஸ்ரீ, அம்சவர்த்தினி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை