உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்த பூஸ்டர்

மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்த பூஸ்டர்

ராசிபுரம்: -'மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க, 'மரவள்ளி பூஸ்டர்' பயன்படுத்த வேண்டும்' என, நாமகிரிப்-பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க, 'மரவள்ளி பூஸ்டர்' பயன்-படுத்துவது அவசியம். மரவள்ளி பூஸ்டர்- ஒரு கொள்கலனில், 40 கிலோ மாட்டு சாணத்தை, 100 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி-யபின், இத்துடன் மரவள்ளி பூஸ்டர் பையில் உள்ள பை-1 மற்றும் பை-2 கலவையை நன்றாக கலந்து, ஒரு சாக்கு பை கொண்டு மூடி இறுக கட்டி, 10 நாட்கள் நொதிக்க விட வேண்டும். இடையில், 3 நாட்களுக்கு ஒருமுறை கலவையை நன்-றாக கலக்கி மீண்டும் கட்டி வைக்கவும். 10 நாட்கள் கழித்து நொதித்த கலவையை வடிகட்டவும். இத்துடன் பை-3 கல-வையை சேர்த்து தேவையான அளவு நீர் கலந்து, 200 லிட்டர் கரைசலாக்கி மரவள்ளி பயிரின் மீது மாலை வேளையில் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்கவும்.ஒரு ஏக்கருக்கு ஒரு முறை தெளிப்பதற்கு ஒரு பை (பை 1, 2, 3 அடங்கியது) மரவள்ளி பூஸ்டர் பயன்படுத்தவும். மரவள்ளி நடவு செய்து, 2-, 3-, 4-வது மாதங்களில், 3 முறை தெளிக்கவும். -மரவள்ளி தேமல் நோய் தாக்கத்தை குறைக்கும். ஊட்டச்சத்து குறைபாடு-களை குறைக்கும். நோய்கள் குறைந்து மகசூல் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !