உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்சேந்தமங்கலம்:மரூர்பட்டி, ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை, மாசி மாத சனிக்கிழமையையொட்டி, மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக, மலையின் உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி