உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூச்சிக்கொல்லியாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த ஆலோசனை

பூச்சிக்கொல்லியாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த ஆலோசனை

நாமகிரிப்பேட்டை: பூச்சிக்கொல்லியாக, வேப்பங்கொட்டை கரைசலை பயன்ப-டுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண்துறையினர் தெரிவித்துள்-ளனர்.இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:பழம், காய்கறி, கீரை செடிகளில் உள்ள சிறிய பூச்சிகளை விரட்ட வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்தலாம். நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள், 5 கிலோ, 100 லிட்டர் தண்ணீர், 200 கிராம் சோப்பு, மெல்லிய மஸ்லின் வகை துணி ஆகிய-வற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பங்கொட்டையை, காலை நேரத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். மரத்தாலான கரண்டியை கொண்டு கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாக கலக்கி விட வேண்டும். எப்போதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம், 3:30 மணிக்கு பின் வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனை கொடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை