ஐந்தாண்டு தலைமறைவுகுற்றவாளி கைது
ஐந்தாண்டு தலைமறைவுகுற்றவாளி கைதுபள்ளிப்பாளையம்:ஐந்து ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.பள்ளிப்பாளையத்தில், 2015ல், வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட வழக்கில், சென்னையை சேர்ந்த சரவணன், 36, என்பவரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின் ஜாமினில் வெளியே வந்த அவர், 2020 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் பதுங்கியிருந்த, சரவணனை போலீசார் கைது செய்தனர்.