மேலும் செய்திகள்
பணிச்சுமையால் அவதியுறும் உடற்கல்வி ஆசிரியர்கள்
21-Nov-2024
நாமக்கல்: நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகரசு தொடக்க கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்-ளிகளில், 1 முதல், 3ம் வகுப்பு வரை, 'எண்ணும் எழுத்தும்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் மதிப்பீடு செய்யவும், களப்பணியாளர்களாக செயல்பட உள்ள பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு உடனிருந்து வழிகாட்டுதல் வழங்கவும், அரசு பள்ளிகளில் பணிபுரியும் முது-கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதுகலை ஆசிரியர்-களை பொறுத்தவரை பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யக்கூடிய பணியை செய்து வருகின்-றனர். அதுமட்டுமின்றி, பள்ளி வேலை நாட்களில், 'நீட்', ஜே.இ.இ., மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்கான பயிற்சி வகுப்புகளை முதுகலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.இவ்வாறு மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் தவிர்த்து பல்வேறு பணிகளை முதுகலை ஆசிரியர்கள் செய்து வரக்கூடிய நிலையில், கூடுதலாக தொடக்க கல்வித்துறையில் செயல்படுத்தப்-பட்டுள்ள, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை மதிப்பீடு செய்-யவும், களப்பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் முது-கலை ஆசிரியர்களை நியமித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்ப-டுத்தி உள்ளது.எனவே, அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி முதுகலை ஆசிரியர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி ஆசிரியர் பணியை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-Nov-2024