மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.3.84 லட்சத்தில் நலத்திட்ட உதவி
நாமக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆறு பேருக்கு, 3.84 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 650 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்-கொண்ட கலெக்டர், பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு பேருக்கு, 5,560 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி, மூன்று பேருக்கு, 2.78 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால் என மொத்தம், ஐந்து பேருக்கு, 2.84 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும், ராசிபுரம் தாலுகா, கீழூர் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ராஜாமணி வாரிசுதாரருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய்க்-கான காசோலை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், சமூக பாது-காப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவ-லர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.