உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து

பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து

நாமக்கல்: நாமக்கல் - சேலம் ரயில் போக்குவரத்து துவங்கியது முதல், சரக்கு ரயிலில், கோழி தீவனமான சோயா, மக்காச்சோளம், புண்-ணாக்கு மற்றும் தவுடு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில் மூலம், நாமக்கல் மாவட்டத்துக்கு கொண்டுவரப்படு-கிறது. இவை, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கும், தமிழ்-நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி இருப்பு வைக்கப்படுகிறது. இந்த கோழித்தீவனம், அத்தியாவசிய பொருட்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வர-வழைக்கப்படுகிறது.அதன்படி, நேற்று பீஹார் மாநிலத்தில் இருந்து, 2,600 டன் மக்-காச்சோளம், 42 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவ-ழைக்கப்பட்டது. அவற்றை, 100 லாரிகள் ஏற்றி சென்று, மாவட்-டத்தில் உள்ள கோழிப்பண்ணை அரவை ஆலைகளில் இருப்பு வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ