உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 8 தாலுகா அலுவலகங்களில்இன்று ரேஷன் குறைதீர் முகாம்

8 தாலுகா அலுவலகங்களில்இன்று ரேஷன் குறைதீர் முகாம்

8 தாலுகா அலுவலகங்களில்இன்று ரேஷன் குறைதீர் முகாம்நாமக்கல்:'மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுகா அலுவலகங்களில், இன்று, பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, பொது வினியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி, இன்று, மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி