உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.9.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.9.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.9.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்நாமகிரிப்பேட்டை,:நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு, 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பு முதல் தரம் அதிகபட்சமாக கிலோ, 146.78 ரூபாய், குறைந்தபட்சமாக, 133.33 ரூபாய், சராசரியாக, 142.99 ரூபாய்க்கு விற்றது. இரண்டாம் தரம் அதிகபட்சமாக, 128.88 ரூபாய், குறைந்தபட்சமாக, 106.78, சராசரியாக, 124.99 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம், 7,099 கிலோ பருப்பு, ஒன்பது லட்சத்து, 58 ஆயிரத்து, 365 ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.மக்காச்சோளம் அதிகபட்சமாக குவிண்டால், 2,381 ரூபாய், குறைந்தபட்சமாக, 2,270 ரூபாய் என, 3,390 கிலோ மக்காச்சோளம், 80 ஆயிரத்து, 519 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை