ஆற்றோர பகுதியில் வீடுகள் கணக்கெடுப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் நாட்டாகவுண்டம்புதுார், ஜனதா நகர், ஆவாரங்காடு, பாவடிதெரு, சந்தைப்பேட்டை, சத்யா நகர் மற்றும் பல பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன. கடந்த மாதம், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, இப்பகுதி-களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டனர். மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இதே நிலைமை தான் ஏற்படும். எனவே, இதற்கு நிரந்தர தீர்வாக, ஆற்-றோரம் வசிப்பவர்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த வாரம் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றோர பகுதியில் உள்ள வீடுகள் குறித்து கணக்கெ-டுத்து வருகின்றனர்.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்-ளிப்பாளையம் ஆற்றோர பகுதியில் உள்ள வீடுகள் குறித்து கணக்-கெடுப்பு நடந்து வருகிறது. இப்பணி முழுமையாக முடிந்த பின் தான், மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்-வாறு அவர் கூறினார்.