பெண் போலீஸ் புகார்: கணவர் அதிரடி கைது
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், கணவர் மது போதையில் அடிப்பதாக, பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் முதல்-நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் சித்தேஸ்வரி. இவ-ரது கணவர் சரவணகுமார், 35. இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், சரவணகுமார் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பதாக சித்தேஸ்வரி சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதை-யடுத்து, போலீசார் சரவணகுமாரை கைது செய்தனர்.