மேலும் செய்திகள்
வாரச்சந்தையை திறக்க கோரிக்கை
19-Mar-2025
காளப்பநாய்க்கன்பட்டியில்17ல் வாரச்சந்தை கடை ஏலம்சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தை இடப்பற்றாக்குறையாக இருந்ததால், சந்தை அருகே, 1.50 கோடி ரூபாய் செலவில், 32 காய்கறி கடைகளும், 14 பொதுவான கடைகளும் கட்டப்பட்டுள்ளன.இந்த கடைகளுக்கான ஏலம், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில் வெளிப்புறத்தில் உள்ள பொதுவான, 14 கடைகளுக்கு மாத வாடகையாக, 4,000 ரூபாய் நிர்ணயம் செய்து, முன்வைப்பு தொகை, 20,000 ரூபாய் என, அறிவிக்கப்பட்டது.ஆனால், ஏலத்தொகை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க ஆளில்லாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட ஏலம், மீண்டும் வரும், 17ல் நடக்கிறது என, டவுன் பஞ்., ஆபீசில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
19-Mar-2025