உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரும் 3ல் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு203 பள்ளிகளில் 18,461 பேர் பங்கேற்பு

வரும் 3ல் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு203 பள்ளிகளில் 18,461 பேர் பங்கேற்பு

வரும் 3ல் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு203 பள்ளிகளில் 18,461 பேர் பங்கேற்புநாமக்கல்:வரும், மார்ச், 3ல், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 203 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 18,461 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2விற்கு, வரும் மார்ச், 3ல் தொடங்கி, 25 வரையும்; பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச், 5ல் தொடங்கி, 27 வரையும்; பத்தாம் வகுப்பிற்கு, மார்ச், 28ல் தொடங்கி, ஏப்., 15 வரையும் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2, மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, கடந்த, 7ல் தொடங்கி, 14ல் முடிந்தது. அதில், 14,402 மாணவர்கள் பங்கேற்றனர். பிளஸ் 1 வகுப்பிற்கான செய்முறை தேர்வு, கடந்த, 15ல் தொடங்கி, வரும், 21 வரை நடக்கிறது. அதில், 14,569 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.மாவட்டத்தில், 106 அரசு மேல்நிலைப்பள்ளியும், 97 தனியார் பள்ளியும் என, மொத்தம், 203 பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். அதற்காக, மாவட்டம் முழுவதும், 86 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 18,461 மாணவ, மாணவியரும், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 18,966 மாணவ, மாணவியரும் கலந்து கொள்கின்றனர். தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை