உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 20ல் மோகனுாரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: கோரிக்கை மனு அளிக்க அழைப்பு

20ல் மோகனுாரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: கோரிக்கை மனு அளிக்க அழைப்பு

நாமக்கல்: 'மோகனுார் தாலுகாவில், வரும், 20ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடக்கிறது. இதையொட்டி, இன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவில் கிடைக்க, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்கிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகாவில், வரும், 20ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்கிறது. அதையொட்டி, இன்று காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மோகனுார் ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தார், ஆர்.ஐ.,; வளையப்பட்டி ஆர்.ஐ., அலுவலகம், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ.,; பாலப்பட்டி ஆர்.ஐ., அலுவலகம், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ.,; மேட்டுப்பட்டி ஆர்.ஐ., அலுவலகம், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ., ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக செயல்பட்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ