மேலும் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம் 317 பேருக்கு பணி ஆணை
22-Sep-2024
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும் மையத்தில் நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 38 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தனியார்துறை நிறுவனங்களும் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை-வாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட வேலை-வாய்பு அலுவலர் ஷீலா தலைமையில் நடதது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 20 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. அதற்காக மாவட்டத்தில் பல்-வேறு பகுதியில் இருந்து பொது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட, 109 பட்டதாரிகள் பங்கேற்றனர். 38 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.
22-Sep-2024