குறைதீர் கூட்டத்தில் 381 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், மொத்தம், 381 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கூட்டுறவுத்துறை சார்பில், 2 விவசாயிகளுக்கு, 1.38 லட்சம் ரூபாய் மதிப்பில், வட்டியில்லா பயிர் கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒருவருக்கு, 2,850 ரூபாய்- மதிப்பில் காதொலி கருவி வழங்கப்பட்டது. தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.