நாமக்கல் உழவர் சந்தையில் 40 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 40 டன் காய்க-றிகள், 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும் அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கிச் செல்-கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்-றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்-தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில், காய்கறிகள் விறுவி-றுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 175 விவசாயிகள் காய்-கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், 34,500 கிலோ காய்கறிகள், 5,545 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 40,165 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்-பனை செய்யப்பட்டன. அவற்றை, 8,033 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 17 லட்சத்து, 43,380 ரூபாய்க்கு விற்ப-னையானது.தக்காளி, ஒரு கிலோ, 22 ரூபாய், கத்தரி, 65 ரூபாய், வெண்டை, 60 ரூபாய், சின்ன வெங்காயம், 65 ரூபாய், பெரிய வெங்காயம், 50 ரூபாய், பூண்டு, 340 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.