உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

சேலம்: சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் அலமேலு, 80; இவருக்கு சொந்தமான தோட்டம், தீவட்டிப்பட்டியில் உள்ளது. நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டு, திருச்சி சாலையில், பிரபாத் சிக்னல் அருகே நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த இருவர், போலீஸ் என, அலமேலு-விடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். மேலும் 'திருடர்கள் தொல்லை இருப்பதால், நீங்கள் இவ்வளவு நகையை அணிந்து செல்லக்கூடாது. கழற்றி பர்சில் வைத்து கொள்ளுங்கள்' என கூறினர். அதை நம்பிய அலமேலு, 5 பவுன் நகையை கழற்றி பர்சில் வைத்தபோது, மர்ம நபர்கள் பிடுங்கி கொண்டு அதிவேகத்தில் சென்றுவிட்டனர். அவர் புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை