உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளிக்கு மழை பெய்யாததால் 90 சதவீதம் பட்டாசு விற்பனை

தீபாவளிக்கு மழை பெய்யாததால் 90 சதவீதம் பட்டாசு விற்பனை

பள்ளிப்பாளையம், தீபாவளி நாளில் மழை இல்லாததால், பள்ளிப்பாளையம் பகுதியில் பட்டாசு விற்பனை, 90 சதவீதம் விற்று தீர்ந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட், பாலம் சாலை, ஒட்டமெத்தை, வெப்படை, உள்ளிட்ட இடங்களில், 30க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தீபாவளி நாளில் மழை பெய்யாததால், பட்டாசு விற்பனை அமோகமாக நடந்ததாக, பள்ளிப்பாளையத்தை சேர்ந்த பட்டாசு வியாபாரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:தீபாவளிக்கு சில நாட்கள் முன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பட்டாசு விற்பனை பாதிக்கும் என, கவலையில் இருந்தோம். தீபாவளிக்கு முதல் நாள் இரவு தான், மக்கள் பட்டாசு வாங்க ஆரம்பித்தனர். தீபாவளி நாளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. விதவிதமான பட்டாசுகள், புதிய வரவு பட்டாசுகள், நடுத்தரம், குறைந்த விலை, இரவு நேரம் வெடிக்கும் பட்டாசுகள் என, அனைத்து தர பட்டாசுகளும் விற்று தீர்ந்தன. இந்தாண்டு, 90 சதவீதம் பட்டாசு விற்பனையாகின.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை