மேடான பகுதியில் கட்டப்பட்ட பாலத்தால் உபரிநீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து நாசம்
சேந்தமங்கலம்: பழையபாளையம் பெரிய ஏரியின் உபரி நீர் செல்ல கட்டப்-பட்ட பாலத்தின் அடியில், தண்ணீர் செல்லும் வகையில் சீர-மைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேந்தமங்கலம் அருகே, பழையபாளையத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. சின்ன ஏரி, பெரிய ஏரி என, 2 ஆக பிரிந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் கனமழை பெய்யும் போது அங்கி-ருந்து வரும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக மாறி, ஏரிக்கு வரும் வகையில் நீர் வழிப்பதை உள்ளது. கடந்த, 2 ஆண்டுக்கு முன் கொல்லிமலையில் பெய்த கன மழையால், இந்த ஏரி நிரம்பி துாசூர் ஏரிக்கு ஒரு வழியாக சென்றது. மற்றொரு வழியில், பெரிய ஏரியில் இருந்து கருவாட்டாற்றிற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறினால், எருமப்பட்டி - சேந்தமங்கலம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத படி தண்ணீர் பாய்ந்தோ-டுகிறது. மேலும், அங்குள்ள, 100 ஏக்கர் விவசாய நிளத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால், இதை தடுக்கும் வகையில், எருமப்பட்டி, சேந்தமங்கலம் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவில், சில ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்-டது. ஆனால், இந்த பாலம் கட்டப்பட்ட இடம் மேடாகவும், தண்ணீர் செல்லும் மற்றொரு பாதை தாழ்வாகவும் உள்ளது. தற்-போது ஏரிக்கு தண்ணீர் வரும் போது, பாலத்தின் அடியில் செல்-லாமல் தாழ்வான பகுதியில் மீண்டும் தார்ச்சாலையை கடந்து தண்ணீர் செல்கிறது. இதனால், இந்த பகுதியில் ஏராளமான விவ-சாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் பாலம் கட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் செல்லும் வகையில், பாலத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.