உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள, காளப்பநாயக்கன்பட்டியில் புளியமரம் முறிந்து விழுந்ததில், 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காளப்பநாயக்கன்பட்டி-காரவள்ளி சாலையில், பெருமாபட்டி காலனி மயான சுற்றுச்சுவருக்கு அருகில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரம் இருந்தது. மரத்தின் அடியில் ஒரு பகுதியில் ஏற்கனவே கரையான் அரித்திருந்தது. கடந்த சில நாட்களாக, அடிக்கடி காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதையறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து, முறிந்து விழுந்த புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காளப்பநாயக்கன்பட்டி-காரவள்ளி சாலையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை