கெடமலையில் சாராயம் காய்ச்சியவர் கைது
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கெடமலையில், நேற்று மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெடமலையை சேர்ந்த நாதன், 60, விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் போட்டிருந்தது தெரிந்தது. மேலும், விற்பனைக்காக ஒரு லிட்டர் சாராயம் வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து நாதனை கைது செய்த போலீசார், 20 லிட்டர் ஊறலை கொட்டி அழித்தனர்.