உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

பள்ளிப்பாளையம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 25; இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று ஈரோட்டில் நடக்கும் தன் நண்பர் திருமணத்திற்கு சென்றார். காலை, 10:00 மணிக்கு, மொளசி அடுத்த முனியப்பன்பாளையம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ