உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

பள்ளிப்பாளையம்: நாமக்கல் அருகே, புதுப்பட்டியை சேர்ந்தவர் வினீத்லால், 22; ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கொக்கராயன்பேட்டை ஆற்று பாலத்தில் வரும்போது, எதிரே வந்த கார் மோதியது.இதில், பலத்த காயமடைந்த வினீத்லால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ