மேலும் செய்திகள்
ஐப்பசி முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
21-Oct-2024
ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தில்பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்சேந்தமங்கலம், நவ. 7-ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு, வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்காளல் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், சேந்தமங்கலம், நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, மலை உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
21-Oct-2024