உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் கலைத்திருவிழா

அரசு பள்ளியில் கலைத்திருவிழா

ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி, பாரதிதாசன் சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், கலைத்திருவிழா நடத்தப்பட்டது. கலைத்திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கதை கூறுதல், ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், கிராமிய நடனம் மற்றும் கோலப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.தலைமை ஆசிரியர் பாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், சிவலீலாஜோதி, மகாலட்சுமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி