ப.வேலுாரில் வெல்லம் விலை உயர்வு ரூ.47 லட்சத்துக்கு வர்த்தகத்தால் மகிழ்ச்சி
ப.வேலுார்: ப.வேலுாரில் வெல்லம் விலை உயர்வால், கரும்பு விவசாயி-களும், வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சிய-டைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்ட-மங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராள-மான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச்சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்-கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பமாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில் சனி, புதன் கிழமைகளில் விற்-பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், தமிழ-கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்-ததால் வெல்லம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,250 ரூபாய்க்கு விற்றது, இந்த வாரம், 1,270 ரூபாய்க்கும்; அச்சுவெல்லம், 1,200 -ரூபாய்க்கு விற்றது, 1,350 ரூபாய்க்கும் விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,100 சிப்பம், அச்சு வெல்லம், 500 சிப்பம் என, 3,600 சிப்பங்கள், 47 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால், கரும்பு பயிரிட்ட விவசாயிகளும், வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வெல்லம் மூட்டைக்கு ரூ.30 விலை உயர்வுஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏல விற்பனையில், 30 கிலோ எடை கொண்ட, 2,700 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,370 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 1,800 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,230 ரூபாய் முதல், 1,380 ரூபாய்; அச்சு வெல்லம், 240 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,310 ரூபாய் முதல், 1,370 ரூபாய்க்கு விற்பனை-யானது. கடந்த வாரத்தைவிட வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து சற்று குறைந்துள்ளது. நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் குறைந்தது. உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் மூட்-டைக்கு, 30 ரூபாய் உயர்ந்தது.