குமாரபாளையம் அருகே சாலை பணிக்கு பூமி பூஜை
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சாலை பணிக்காக பூமி பூஜை நடந்தது.குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, காந்தி நகர் முதல் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தினமும் வேலைக்கு செல்பவர்கள், கல்லுாரி, பள்ளிக்கு செல்ப-வர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள தார்ச்சாலை முற்றிலும் பழுதாகி, பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது.இந்நிலையில், இப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்கா-விட்டால் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனர். இதை-யடுத்து, தி.மு.க., மாவட்ட செயலர் மூர்த்தி வழிகாட்டுதல்படி, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து முன்னிலையில், காந்திநகர் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்-பினர் வேலுமணி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜேந்-திரன், மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் சவுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.