உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், 'நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' என, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வரும் அக்., 15ல் தொடங்க உள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பம் வரும் அக்.,15 வரை பயிற்சி நிலையத்தில், 118 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பயிற்சி காலம், 2 மாதம். கல்வி தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம், 4,550 ரூபாய் செலுத்த வேண்டும்.இக்கட்டணத்தில் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரமும் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்தபின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை