வடிகாலில் ரசாயன நெடியுடன் சாயக்கழிவுநீர்
பள்ளிப்பாளையம்: ஒட்டமெத்தை பகுதியில் செல்லும் வடிகாலில், இரவு நேரத்தில் ரசாயனம் கலந்த நெடியுடன் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் செயல்-படும் சாய ஆலைகள், விதிமீறி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஆற்று தண்ணீர் மாசடைகிறது. மாச-டைந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும்-போது புற்றுநோய், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட பல்-வேறு வகையான உடல்பாதிப்புகள் ஏற்படுகின்-றன.பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் சென்றால் மட்டும், விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது, குமாரபாளையம் மாசுகட்டுப்-பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்-றனர். இல்லையெனில் அலட்சியமாக உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில், ஒட்-டமெத்தை பகுதியில் செல்லும் வடிகாலில் ரசா-யனம் கலந்த நெடியுடன் சாயக்கழிவுநீர் சென்-றது. இந்த சாயக்கழிவுநீர், ஒன்பதாம்படி பகுதி வழியாக வந்து நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இரவில் வடிகாலில் நெடியுடன் சாயக்கழிவுநீர் வருவததை, சிலர் வீடியோ எடுத்-துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.எனவே, மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலை மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்-ளனர்.