உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை உயர்வு

தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை உயர்வு

ப.வேலுார்,ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்துக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், வெளி மாவட்ட வியாபாரிகளும் வந்தனர்.கடந்த வாரம் தேசிய வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு, 7,520 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.188.10, குறைந்தபட்சமாக, ரூ.136.99, சராசரியாக, ரூ.185.10க்குஏலம் போனது. மொத்தம், 11 லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,350 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 196.89, குறைந்தபட்சமாக, 166.11, சராசரியாக, ரூ.194.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 12 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை