மேலும் செய்திகள்
தேங்காய் பருப்பு ஏலம்
09-May-2025
ப.வேலுார்,:தேசிய வேளாண்மை சந்தையில், தேங்காய் பருப்பு கடந்த வாரத்தை விட, விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதி களில் இருந்து விவசாயி கள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர்.கடந்த வாரம், 7,350 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 196.89 ரூபாய், குறைந்தபட்சமாக, 166.11 ரூபாய், சராசரியாக, 194.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், ரூ.12 லட்சத்து 12 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்திற்கு, 8,913 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, ரூ.216.69, குறைந்தபட்சமாக, ரூ.191.99, சராசரியாக, ரூ.214.39க்கு ஏலம் போனது. மொத்தம், ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
09-May-2025