ப.வேலுார், வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தைக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர் மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம் நடந்த தேசிய வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு, 6,230 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 227.19 ரூபாய், குறைந்தபட்சமாக, 210.10 ரூபாய், சராசரியாக, 226.91 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 13 லட்சத்து, 71 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 8,470 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 230.20 ரூபாய், குறைந்தபட்சமாக, 215.29 ரூபாய், சராசரியாக, 228.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 18 லட்சத்து, 47 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.