உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.2.90 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.2.90 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், ரூ.63 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகின்றது. அதன்-படி நேற்று நடந்த ஏலத்தில் பள்ளக்குழி, காளிப்பட்டி, செண்பகமாதேவி, மானுவங்காட்டுபாளையம், மேல்-முகம், சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள், 60 கிலோ எடைகொண்ட, 11 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோவிற்கு ரூ.161 முதல் 215.10 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.101 முதல் 150.50 வரையிலும் என மொத்தம், 63 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.* திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு (கொப்பரை) ஏலத்தில், கந்தம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், திருச்செங்கோடு பகு-திகளில் இருந்து, 29 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் முதல்-தரம் கிலோ, 211 முதல் 230 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம், 146 முதல் 186 ரூபாய் வரையிலும் விற-பனையானது. மொத்தம், 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை