உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

நாமக்கல், நவ. 9-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். அதில், கூட்டுறவு சங்க பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம், 13 மனுக்கள் பெறப்பட்டு, http:/rcs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.'மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். மனுதாரர்கள், விண்ணப்பம் குறித்த நிலையை மேற்கண்ட இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். சரக துணைப்பதிவாளர்கள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை