தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 555 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 560 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஐயப்பன் சீசன் துவங்கிய நிலையில், முட்டை கொள்முதல் விலை, தொடர்ந்த அதிகரித்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 600, ஐதராபாத், 575, விஜயவாடா, 590, பர்வாலா, 614, மும்பை, 645, மைசூர், 602, பெங்களூரு, 600, கொல்-கத்தா, 645, டில்லி, 650 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, எவ்-வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்-டது.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்-டத்தில், ஒரு கிலோ, 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.