பஸ் ஏறி, இறங்கியதில் மூதாட்டி உடல் நசுங்கி பலி
ப.வேலுார் :ப.வேலுாரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் ஒன்று, நேற்று காலை ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தது. அப்போது பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டி மீது, அந்த தனியார் பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உடல் நசுங்கி பலியானார்.தகவலறிந்து வந்த போலீசார், மூதாட்டி உடலை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த மூதாட்டி யார் என்ற விபரம் தெரியவில்லை. அவர் யார், எந்த ஊர் என்பது குறித்து ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர், ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுாரை சேர்ந்த சேகர், 45, என்பவரை கைது செய்தனர்.