உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி எருமப்பட்டி பொதுமக்கள் மனு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி எருமப்பட்டி பொதுமக்கள் மனு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிஎருமப்பட்டி பொதுமக்கள் மனுநாமக்கல், நவ. 19-எருமப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி, அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், வரும், 2025 தை மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த, எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டியில் உள்ள பாரூக் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போதிய இடவசதி உள்ளது. அந்த இடத்தை சுற்றியுள்ள இடத்தாரிடமும் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில், 2025 ஜன., 18ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை