மேலும் செய்திகள்
ரூ. 2.40 கோடியில் குளங்கள் துார்வாரும் பணி
09-Oct-2024
ப.வேலுார்: காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு தண்ணீரை, ஏரி, குளங்களில் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இடும்பன் குளம் ஏரி, 400 ஏக்கரில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வரா-யன்மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், பூலா-வரி, ஆட்டையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், கொன்னையாரு, மாணிக்கம்பாளையம், பரமத்தி வழியாக இடும்பன் குளம் ஏரியை அடைகிறது.அங்கிருந்து, ப.வேலுார் நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் சங்-கமிக்கிறது. இடும்பன் குளம் ஏரி நீரை பயன்படுத்தி, நுாற்றுக்க-ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடைகாலத்தில் தண்ணீரின்றி வற்றிவிடுவதால், சுற்று வட்டா-ரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாசன பரப்பளவும் குறைந்து விடுகிறது. இது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்ப-டுத்தி வருகிறது. தொடர்ந்து, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தால், பயிர் சாகுபடியும் தடையின்றி மேற்கொள்ளப்படும். சுற்று வட்டார மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து, அவர்க-ளது பொருளாதாரம் உயரும்.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இடும்பன் குளம் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர், திருமணி முத்தாறு வழியாக, நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் கலந்து வீணாகிறது. அவற்றை தவிர்த்து, திருமணி முத்தாறு பாய்ந்தோடும் பகுதி-களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரை திருப்பி நிரப்ப வேண்டும். அதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பாசனத்துக்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும். மக்கள் பயன்-பாட்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும், இடும்பன் குளம் துார்வார வேண்டும். அதிலுள்ள கருவேல மரங்-களை அகற்றினாலே, கடல்போல் காட்சியளிக்கும். அவற்றை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
09-Oct-2024